
தமிழறிஞரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தமிழறிஞரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா மனைவி ஜெயபாய் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
உற்ற துணையான வாழ்விணையரை இழந்து தவிக்கும் சாலமன் பாப்பையாவுக்கு எனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.