சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

வெள்ளக்கோவிலில் தனியார் மதுபானக் கூடம் அமைக்க மக்கள் எதிர்ப்பு!

தனியார் மதுபானக் கூடம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர்.

Published On :14 ஜனவரி 2025, 2:39 pm IST

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் தனியார் மதுபானக் கூடம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் சாலையில் நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பழைய திருமண மண்டபத்தில் நவீன வசதிகளுடன் தனியார் மதுபானக் கூடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனருகே, பள்ளிக் கூடம், தபால் அலுவலகம், ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில், தர்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயில் போன்றவை உள்ளன. சுற்றிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், 50-க்கும் அதிகமான கடைகள் உள்ளன.

எனவே, பல்வேறு தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கவுள்ள மதுபான விற்பனைக் கூடத்தை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மதுபானக் கூடம் அமையவுள்ள கட்டடத்துக்கு முன்புறம் சாலையில் திரண்ட 150 ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அரை மணி நேரம் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தைப்பொங்கல் நாளில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொது மக்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.