இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புடைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலியான விவகாரம்..ஒருவருக்கு ஆயுள் தண்டனை!

உத்தரப் பிரதேசத்தில் சிறுமி ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானதில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு...

News image

கோப்புப் படம்

Updated On :22 ஜனவரி 2025, 12:45 pm IST

உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலியானதில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு அம்மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதியன்று பரேலி மாவட்டத்தின் குயிலா பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிப்ஸா (வயது 4) அவரது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஷம்சர் அலி என்பவரது வீட்டின் வாசலில் இருந்த மின்சார கம்பியை சிறுமி தொட்டதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் மாமா இர்பான் ராஸா என்பவர் காவல் துறையினரிடன் அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் போது ஷம்சர் அலி தனது வீட்டிற்கு சட்டவிரோதமாக மின்சாரம் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மின்சார இணைப்பு முறைப்படி பொருத்தப்படாததினால் அது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதத்தில் இருந்ததுள்ளது.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் சுமார் 7 சாட்சிகளையும், 15 பகுதிகளான ஆதாரங்களையும் கொண்டு நீதிமன்றத்தில் காவல் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கு தற்போது பரேலி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக மின்சாரம் திருடி சிறுமியின் உயிர் பலியாக காரணமாக அமைந்தததற்காக ஷம்சர் அலிக்கு, நீதிபதி ரவிக்குமார் திவாகர் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.