வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

இரும்புக் காலம்: இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படுவதற்கான அச்சாணி!

5.300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டது தொடர்பாக...

News image
Updated On :23 ஜனவரி 2025, 5:34 pm IST

5.300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் அறிவித்த நிலையில், இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படுவதற்கான அச்சாணி என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்

மேலும், கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொன்மையினங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தையும் முதல்வர் தொடக்கிவைத்தார்.

5.300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்டது ஆய்வின் முடிவில் தெரியவந்ததாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

இந்நிலையில், இது குறித்து நிதியமைச்சர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:

”சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொல்லியல் துறை சார்பில் இன்று நடைபெற்ற விழாவில், முதல்வர் ஸ்டாலின் ‘இரும்பின் தொன்மை’ நூலை வெளியிட்டு, ரூ.17 கோடி மதிப்பீட்டில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டி, கீழடி இணையதளத்தைத் தொடங்கி வைத்துக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த தொல்பொருள்களைப் பார்வையிட்ட நிகழ்வில், அமைச்சர்கள், தொல்லியல் அறிஞர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்டோரோடு பங்கேற்றேன்.

உலகிற்கு வழிகாட்டியாகத் திகழும் தலைநிமிர்ந்த தமிழினத்திற்கு மேலும் ஒரு மணிமகுடமாக, தொல்லியல் ஆய்வு முடிவுகளைச் சுட்டிக்காட்டி, முதல்வர் ஸ்டாலின் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தொல் தமிழ்ச் சமூகம் இரும்பின் பயன்பாட்டைக் கண்டறிந்து, இரும்பு உருக்கு தொழில்நுட்பத்தைக் கையாண்டதாக அறிவித்தது, இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்படுவதற்கான அச்சாணி!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.