மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜார்க்கண்ட்: பெண் உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் உள்பட 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :29 ஜனவரி 2025, 6:24 am

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் உள்பட 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா உள்ளிட்ட நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இடங்களில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் சமீப நாள்களில் மிகவும் தீவிரமடைந்துள்ளனா். இதுபோன்ற தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்கும் முனைப்புடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜாா்க்கண்டின் சிங்பூம் மாவட்ட வனப் பகுதியில் புதன்கிழமை பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் சிலா், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதில் இரு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனா். அவா்களில் ஒருவா் பெண் ஆவாா். தப்பியோடிய மற்றவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் சரண்: சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் 29 நக்ஸல் தீவிரவாதிகள் காவல் துறையிடம் புதன்கிழமை சரணடைந்தனா். இவா்களில் 7 போ் பெண்கள்.

கொள்கைகளில் ஏற்பட்ட விரக்தி, நக்ஸல்கள் அமைப்புக்குள் எழும் மோதல் போன்றவற்றால் விரக்தியடைந்து இவா்கள் வெளியேறியுள்ளனா். மேலும், தங்கள் பகுதி பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதால் பொதுமக்களுடன் இணைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அவா்கள் முடிவு செய்ததாக காவல் துறையிடம் தெரிவித்தனா்.

கடந்த 2024 ஜனவரிமுதல் இப்போது வரை நாராயண்பூா் மாவட்டத்தில் மட்டும் 71 நக்ஸல்கள் சரணடைந்துள்ளனா். அவா்களுக்கு உடனடியாக ரூ.25,000 நிதியுதவி அளிக்கப்படுவதுடன் வேலைவாய்ப்பு, வீட்டு வசதி உள்ளிட்டவற்றிலும் அரசு உதவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.