மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜார்க்கண்ட்: பெண் உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் உள்பட 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image
கோப்புப் படம்
Updated On :29 ஜனவரி 2025, 6:24 am

DIN

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் உள்பட 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட், ஒடிஸா உள்ளிட்ட நக்ஸல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கமுள்ள இடங்களில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் சமீப நாள்களில் மிகவும் தீவிரமடைந்துள்ளனா். இதுபோன்ற தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிக்கும் முனைப்புடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜாா்க்கண்டின் சிங்பூம் மாவட்ட வனப் பகுதியில் புதன்கிழமை பாதுகாப்புப் படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் சிலா், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதில் இரு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனா். அவா்களில் ஒருவா் பெண் ஆவாா். தப்பியோடிய மற்றவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் சரண்: சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் 29 நக்ஸல் தீவிரவாதிகள் காவல் துறையிடம் புதன்கிழமை சரணடைந்தனா். இவா்களில் 7 போ் பெண்கள்.

கொள்கைகளில் ஏற்பட்ட விரக்தி, நக்ஸல்கள் அமைப்புக்குள் எழும் மோதல் போன்றவற்றால் விரக்தியடைந்து இவா்கள் வெளியேறியுள்ளனா். மேலும், தங்கள் பகுதி பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதால் பொதுமக்களுடன் இணைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அவா்கள் முடிவு செய்ததாக காவல் துறையிடம் தெரிவித்தனா்.

கடந்த 2024 ஜனவரிமுதல் இப்போது வரை நாராயண்பூா் மாவட்டத்தில் மட்டும் 71 நக்ஸல்கள் சரணடைந்துள்ளனா். அவா்களுக்கு உடனடியாக ரூ.25,000 நிதியுதவி அளிக்கப்படுவதுடன் வேலைவாய்ப்பு, வீட்டு வசதி உள்ளிட்டவற்றிலும் அரசு உதவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.