வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் 6 ராக்கெட் குண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் ஹெங்லெப் காவல் நிலையக் கட்டுபாட்டிலுள்ள லோயிலம்கோட் மற்றும் நாலோன் பகுதியில் நேற்று (ஜன.28) பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையின்போது 6 ராக்கெட் குண்டுகள் மற்றும் அதை ஏவக்கூடிய லாஞ்சர் ஒன்று மற்றும் ஒரு நாட்டு மோர்ட்டார் ஆயுதம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இத்துடன், 7.62 மி.மீ குறிபார்த்து சுடக்கூடிய துப்பாக்கி குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஜார்க்கண்டில் நக்சல் சுட்டுக்கொலை
இந்நிலையில், கிழக்கு இம்பால் மாவட்டத்தின் இன்கோல் கிராமத்தில் பொது மக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள கடைகளில் பணம் பறிப்பில் ஈடுபட்ட கே.சி.பி எனும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கியும் அதன் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஞ்சியில் ஆா்எஸ்எஸ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு? காவல்துறை விசாரணை

ஜார்க்கண்டில் ரயிலில் கடத்தப்பட்ட 174 திருட்டு மொபைல்கள் பறிமுதல்: 2 பேர் கைது!

மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!
ஆயுதங்கள் கடத்தல்: 9 போ் கைது; 23 துப்பாக்கிகள் பறிமுதல்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



