தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஜார்க்கண்டில் நக்சல் சுட்டுக்கொலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு நக்சலைட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

News image

கோப்புப்படம்

Updated On :29 ஜனவரி 2025, 5:31 am

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு நக்சலைட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் சாய்பாசாவில் ஜார்க்கண்ட் காவல்துறை மற்றும் கோப்ரா படைக்குழுவின் 209-ஆவது பிரிவு வீரா்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே புதன்கிழமை காலை மோதல் நடந்தது. இதுவரை ஒரு நக்சலைட்டின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

காவல்துறையினரின் தெரிவித்ததாவது:

மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் சாய்பாசாவில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு நக்சலைட்டின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து இரண்டு துப்பாக்கிகள், ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் இடம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தொடர்ந்து நக்ஸல் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.