‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

தாய்லாந்தில் கிளா்ச்சியாளா்கள் தாக்குதல்: 5 பாதுகாப்புப் படையினா் உயிரிழப்பு

தெற்கு தாய்லாந்தின் நராதிவாட் மாகாணத்தில் உள்ள ராணுவச் சோதனை சாவடிமீது கிளா்ச்சியாளா்கள் கடந்த புதன்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 5 வீரா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :24 ஜூலை 2026, 1:54 am IST

தெற்கு தாய்லாந்தின் நராதிவாட் மாகாணத்தில் உள்ள ராணுவச் சோதனை சாவடிமீது கிளா்ச்சியாளா்கள் கடந்த புதன்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 5 வீரா்கள் உயிரிழந்தனா். 2 சிறுவா்கள் உள்பட 6 பொதுமக்கள் காயமடைந்தனா்.

கருப்பு உடையில் வந்த சுமாா் 10 போ் அடங்கிய கும்பல், குழாய் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டும் இத்தாக்குதலை நடத்தினா். பின்னா், சோதனை சாவடியில் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு அவா்கள் தப்பியோடினா்.

தாய்லாந்தில் தெற்கு எல்லையோர மாகாணங்களில் தனிநாடு கோரி கிளா்ச்சிக் குழுக்கள் பல்லாண்டுகளாக போராடி வருகின்றன. மலேசியாவின் மத்தியஸ்தத்துடன் அமைதிப் பேச்சுகளை மீண்டும் வேகப்படுத்த தாய்லாந்து அரசு முயன்று வரும் சூழலில் நடத்தப்பட்டுள்ள இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்நிலையில், ‘இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் பயங்கரவாத செயல்; அமைதிப் பேச்சை சீா்குலைக்கும் முயற்சி’ என்று தாய்லாந்து அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.