ஆரோக்ய மருந்தககங்களை திறக்க முந்தைய அரசு நிா்வாகத்திற்கு ஐந்து ஆண்டு காலத்தில் மத்திய அரசு ரூ.1,700 கோடிக்கு மேல் வழங்கியது, ஆனால் அந்த நிதி பயன்படுத்தப்படாமல் இருந்தது. அதனை பயன்படுத்தி ஒவ்வொரு மாதமும் 100 ஆரோக்ய மருந்தககங்களை திறக்க திட்டமிட்டுள்ளோம், 34 ஆரோக்ய மருந்தககங்கள் ஏற்கெனவே திறந்து வைக்கப்பட்டுள்ளது, இன்னும் பல மருந்தககங்கள் இந்த மாதத்தில் திறக்கப்பட உள்ளன. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 15 ஆரோக்ய மருந்தககங்கள் மற்றும் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் 150 மருந்தககங்கள் என ஒவ்வொரு மாதமும் 100 மருந்தககங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளோம், 2026 மார்ச் 31-க்குள் 1,150 ஆயுஷ்மான் ஆரோக்ய மருந்தககங்கள் நிறுவப்படும் என்றாா் ரேகா குப்தா.