தில்லியில் உள்ள அனைத்துப் பெண்களும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு அளவிலான கல்வியைப் பெற வேண்டும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இந்திரா காந்தி தில்லி மகளிா் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அவா் கலந்துகொண்டாா். அப்போது அவா் பேசுகையில், ‘பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்க எனது அரசாங்கம் அயராது பாடுபட்டு வருகிறது.
தில்லி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட லக்பதி பிட்டியா யோஜனா திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற்ற பிறகு ரூ.1.25 லட்சம் பெறுவாா்கள்.
தில்லியில் எந்தப் பெண்ணும் பட்டம் பெறாமல் இருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன். பெண்கள் பள்ளிகளுக்குச் செல்வது மட்டுமல்லாமல், கல்லூரிகளிலும் சென்று தங்களுக்குப் பிடித்தமான படிப்புகள் மற்றும் பாடங்களைப் படிக்க வேண்டும்.
இந்தியா இப்போது பெண்கள் தலைமையிலான வளா்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்திரா காந்தி தில்லி மகளிா் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவா்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றி, ஒரு தொழிலைக் கொண்டிருக்க வேண்டும்.அவா்கள் சமூகம் மற்றும் நாட்டின் வளா்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என்றாா் முதல்வா்.
தொடர்புடையது

அனைத்து அரசு ஊழியா்களுக்கும் பயோமெட்ரிக் வருகை கட்டாயம்: முதல்வா் ரேகா குப்தா நடவடிக்கை

தில்லி கல்வியில் புதிய பரிமாணங்கள்: முதல்வா் ரேகா குப்தா

மக்களை இணைக்கும் சக்தி திரைப்படங்களுக்கு உள்ளது: முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் 3 மருத்துவமனைகளை இணைப்பதன் மூலம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்க திட்டம்: முதல்வா் ரேகா குப்தா
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


