
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,220 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியில் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி காவிரியில் வினாடிக்கு 25,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை காலை முதல் கபினியில் திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு வர தொடங்கியது.
வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8,218 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலையில் வினாடிக்கு 16,341 கன அடியாகவும் சனிக்கிழமை காலை வினாடிக்கு 18,220 கன அடியாகவும் அதிகரித்து உள்ளது.
நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் நேற்று காலை 113.57 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 113.69 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அணையின் நீர் இருப்பு 83.76 டிஎம்சியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.