/
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை காலை இரண்டாவது நாளாக வினாடிக்கு 2161கன அடியாக நீடிக்கிறது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இரண்டாவது நாளாக வினாடிக்கு 2,161 கன அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட அனையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயரத் தொடங்கியுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 78.89 அடியிலிருந்து 78.97 அடியாக உயர்ந்துள்ளது . நீர் இருப்பு 40.93 டி.எம்.சியாக உள்ளது .











