மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை காலை 1017 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, வினாடிக்கு 242 கனஅடியிலிருந்து வினாடிக்கு 1,017 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.18 அடியிலிருந்து 82.14 அடியாக சற்று குறைந்துள்ளது. நீர் இருப்பு 44.12 டிஎம்சி ஆக உள்ளது .
Summary
The amount of water entering the Mettur Dam has increased to 30,500 cubic feet per second as of 8 am today (April. 11).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











