விபத்தில் படுகாயம்: உதவியாளர் உதவியுடன் தேர்வு எழுதிய பிளஸ் 1 மாணவன்!

மதுரையில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காலில் காயம் ஏற்பட்ட மாணவன் உதவியாளர் உதவியுடன் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதிவருவது ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் உதவியாளர் உதவியுடன் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதிவரும் மாணவன் தினேஷ்.
மதுரையில் உதவியாளர் உதவியுடன் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதிவரும் மாணவன் தினேஷ்.
Published on
Updated on
1 min read

மதுரை: மதுரையில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காலில் காயம் ஏற்பட்ட மாணவன் உதவியாளர் உதவியுடன் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதி வருவது ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்ற மாணவன் மதுரா கல்லூரி பள்ளியில் பிளஸ் 1 படித்துவரும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு விராதனூர் அருகே பேருந்திற்காக காத்திருந்தபோது அரசுப் பேருந்து மோதி கால் மற்றும் இடுப்பில் கடுமையான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 5) முதல் மாா்ச் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், முதல் நாள் நடைபெறும் தமிழ் மொழித் தேர்வை கடுமையான காயங்களுடன் தேர்வுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறே படித்த மாணவன் தினேஷ் காலில் காயத்தோடு உதவியாளர் உதவியுடன் பிளஸ் 1 பொதுத் தோ்வை எழுதி வருகிறார்.

சிறு வயதிலயே தந்தையை இழந்த தினேஷ், நன்கு படிக்கும் என்ற கூலித்தொழிலாளியான தனது தாயாரின் ஆசை நிறைவேற்றுவதற்காக வேதனையையும் பொருட்படுத்தாமல் பொதுத்தேர்வு எழுதி வருவது ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com