அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சட்டவிரோத சுரங்க வழக்கில் கோவா சுற்றுலாத் துறை அமைச்சர் விடுவிப்பு!

சட்டவிரோத சுரங்க வழக்கில் கோவா சுற்றுலாத் துறை அமைச்சர் விடுவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image

கோவா மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஹன் கௌண்டே

Updated On :7 மார்ச் 2025, 8:28 pm IST

சட்டவிரோத சுரங்க வழக்கிலிருந்து கோவா சுற்றுலாத் துறை அமைச்சரை பெங்களூர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையிலான விசாரணை குழு சமர்பித்த அறிக்கையில் கோவா மாநிலத்திலுள்ள 90 இரும்பு தாது சுரங்கங்களும் முறையான சுற்றுச்சூழல் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதுடன் அதன் மூலம் அரசுக்கு 5 ஆண்டுகளில் சுமார் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பணம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, 2012 செப்டமபரில் அம்மாநில அதிகாரிகள் அனைத்து சுரங்கங்களையும் மூட உத்தரவிட்டனர். ஆனால், 2015 ஆம் ஆண்டு கோவா அரசு 88 சுரங்கங்களின் குத்தகையை புதுப்பித்து அனுமதியளித்தது.

இந்த விவகாரம் கடுமையான சட்ட ரீதியான எதிர்ப்புகளை உண்டாக்கியதுடன் பல்வேறு குற்றசாட்டுக்களையும் எழுப்பியது. அதனால், கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த குத்தகைகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, புதிய குத்தகைகள் வெளிப்படையான முறையில் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த வழக்கில் அப்போது கோவா மாநிலத்தின் சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சராக இருந்த ரோஹன் கௌண்டே மீது சட்டவிரோதமான முறையில் சுரங்கம் தோண்டவும் அதனை போக்குவரத்து செய்யவும் அனுமதித்தாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இது தொடர்பான விரிவான ஆதாரங்களும் சாட்சியங்களும் பல மாதங்களாக ஆராயப்பட்டதாகவும் கௌவுன்டே அனைத்து தேவையான நடைமுறைகளையும் கடைப்பிடித்ததாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், அரசு தரப்பில் அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த சுரங்க விவகாரத்தில் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதுடன் சுற்றுச்சூழல் மாசுப்பாடு ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்தில் சுரங்கத் துறையில் முறைக்கேடு நடந்திருந்தாலும் அதற்கு கௌண்டே தான் முழு காரணம் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் அரசு தரப்பில் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கிலிருந்து தற்போதைய கோவா மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ள ரோஹன் கௌண்டே விடுவிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.