சீமான் வீட்டு காவலாளி, உதவியாளருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் !
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உதவியாளர் அமல்ராஜ், பாதுகாவலர் சுபாகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உதவியாளர் அமல்ராஜ், பாதுகாவலர் சுபாகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
சீமான் வீட்டில் காவல்துறை ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், சீமான் வீட்டு பணியாளர் சுபாகர் மற்றும் வீட்டுக் காவலாளி அமல்ராஜ் ஆகியோருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, சம்மனை கிழித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், போலீஸாரை தாக்கியதாகவும் இரு வெவ்வேறு வழக்குகள் பதியப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சீமான் உதவியாளர் அமல்ராஜ், பாதுகாவலர் சுபாகருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
மேலும், மறு உத்தரவு வரும் வரை இரண்டு பேரும் பூக்கடை காவல் நிலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...