சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரிவு-3 இன் படி திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 30.10 கி.மீ நீளத்துக்கு புதிய 6 வழிச்சாலை மற்றும் இருவழி சேவைச்சாலை (இருபுறமும்) அமைக்க மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு, திருவள்ளூர் புறவழிச்சாலையிலிருந்து வெங்காத்தூர் வரை 10.4 கி.மீ நீளத்துக்கான சாலைப் பணிகள் ரூ.1133.20 கோடி மதிப்பிலும், வெங்காத்தூர் முதல் செங்காடு வரை 10.00 கி.மீ நீளத்துக்கான சாலைப் பணிகள் ரூ. 593.27 கோடி மதிப்பிலும், செங்காடு முதல் திருப்பெரும்புதூர் வரை 9.70 கி.மீ நீளத்துக்கான சாலைப் பணிகள் ரூ.963.27 கோடி மதிப்பில் என மொத்தம் 30.10 கி.மீட்டர் சாலைப் பணிகள் ரூ.2,689.74 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.