தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து மோதி 15 நாட்டு மாடுகள் பலியானது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தனசேகரன். நாட்டு மாடுகளை வளர்த்து வரும் இவர், பெரியகுளம் அருகேயுள்ள ஜல்லிபட்டி பகுதியில் 40-க்கும் மேற்பட்ட மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வேறு பகுதியில் மேய்ச்சலுக்காக புதன்கிழமை இரவு டி.கள்ளிப்பட்டி அருகே புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, தேனியிலிருந்து திண்டுக்கல்லுக்கு சென்ற அரசுப் பேருந்து மாடுகள் மீது மோதியது.
இதில், 14 பசு, 1 காளை என 15 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கால்நடை பராமரிப்புத்துறை பெரியகுளம் கோட்ட உதவி இயக்குநர் அப்துல் ரஹ்மான் தலைமையிலான கால்நடை மருத்துவர்கள் வியாழக்கிழமை காலை சம்பவ இடத்திற்கு சென்று மாடுகளை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்தனர்.
இது குறித்து தென்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

தென்னந்தோப்பு காவலாளி வெட்டிக் கொலை

அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழப்பு

காா் மீது பேருந்து மோதல்: மூவா் பலத்த காயம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


