கனமழை: குற்றால அருவியில் குளிக்கத் தடை!

கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை!
குற்றாலம் பேரருவி (கோப்புப்படம்)
குற்றாலம் பேரருவி (கோப்புப்படம்)
Updated on
1 min read

கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை பகுதியில் நேற்று கனமழை பெய்தது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் குற்றால அருவியில் இன்று நீர்வரத்து குறைவாக உள்ளபோதும் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com