தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள வாக்கு எண்ணும் மையங்களின் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியிலும், கும்பகோணம் அரசு ஆடவா் கலைக் கல்லூரியிலும், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மையங்களில் காவல் துறையினா், துணை ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இந்த 3 மையங்களில் பாதுகாப்பு கருதி வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் மே 5 மாலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு

வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: ட்ரோன்கள் பறக்கத் தடை

வாக்கு எண்ணும் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை: ஆட்சியா்

ஏப். 3-இல் பிரதமா் மோடி வருகை: புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


