ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு: ட்ரோன்கள் பறக்கத் தடை

News image

கோப்புப்படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 4:18 am IST

வேலூா் மாவட்டத்தின் 5 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான தொரப்பாடி தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதனை சுற்றி 1 கி.மீ., சுற்றளவுக்கு ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள்பறக்கவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்று முடிந்தது. வேலூா் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூா், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), கே.வி.குப்பம் (தனி) ஆகிய 5 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளைக் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான வேலூா் தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு வளையங்களுடன் பாதுகாப்பாக வைக்கப்பட உள்ளன.

இதனால், தந்தை பெரியாா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து 1 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, வாக்குப்பதிவு நாளான வியாழக்கிழமை முதல் மே 5-ஆம் தேதி வரை, அப்பகுதியில் தோ்தல் தொடா்பான அனைத்துப் பணிகளும் நிறைவடையும் வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள்பறக்கவிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.