அருணாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

அருணாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்

அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் வெள்ளிக்கிழமை(மே 23) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
Published on

தவாங்: அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் வெள்ளிக்கிழமை(மே 23) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.10 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் தவாங் பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com