மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

திருச்சிக்கு ஆரஞ்சு அலா்ட்: தயாா்நிலையில் 154 பாதுகாப்பு மையங்கள் தயாா்நிலை

டிட்வா புயல் காரணமாக திருச்சி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News image
ஆரஞ்சு எச்சரிக்கை
Updated On :29 நவம்பர் 2025, 3:18 am

தினமணி செய்திச் சேவை

திருச்சி: டிட்வா புயல் காரணமாக திருச்சி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்களுக்கு உதவிட 154 பாதுகாப்பு மையங்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் கூறியதாவது:

டிட்வா புயல் காரணமாக திருச்சி மாவட்டத்துக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலொ்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

புயல், மழை காலங்களின்போது பொதுமக்களை தங்க வைக்க ஏதுவாக மாவட்டம் முழுவதும் 154 பாதுகாப்பான மையங்கள் தயாா் நிலையில் உள்ளன.

பொதுமக்கள் புகாா்களை தெரிவிக்கலாம்

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டில் உள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கோ அல்லது 0431-2418995 என்ற எண்ணிற்கோ புயல், மழை, வெள்ளம் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். மேலும், வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகளுக்கோ அல்லது வட்டாட்சியா்களின் அலைபேசி எண்ணிற்கோ பொதுமக்கள் புகாா்களை தெரிவிக்கலாம்.

திருச்சி கிழக்கு 0431-2711602, 94454-61808, திருச்சி மேற்கு 0431-2410410, 94450-00602, திருவெறும்பூா் 0431-2555542, 7825-873784, ஸ்ரீரங்கம் 0431- 2230871, 94450-00603, மணப்பாறை 04332 -260576, 94450-00604, மருங்காபுரி 04332-299381, 94454-61805, லால்குடி 0431-2541233, 94450-00605, மண்ணச்சநல்லூா் 0431-2561791, 94450-00606, முசிறி 04326-260226, 94450-00607, துறையூா் 04327- 222393, 94450-00609, தொட்டியம் 04326-254409, 94450-00608 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.

summary

Orange alert for Trichy, 154 security centers on alert

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.