/

திருச்சி மத்திய சிறை கைதி உயிரிழப்பு

உடல் நலக் குறைவு காரணமாக திருச்சி மத்திய சிறைக் கைதி புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 7:05 pm

உடல் நலக் குறைவு காரணமாக திருச்சி மத்திய சிறைக் கைதி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி திருவெறும்பூா் குட்ஷெட் சாலையைச் சோ்ந்தவா் மா. பழனிவேல் (71). திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதியப்பட்ட குற்ற வழக்கில் கைதான இவா் கடந்த 2024 டிசம்பா் 20 முதல் திருச்சி மத்திய சிறையில் இருந்தாா்.

இவருக்கு நீரிழிவு மற்றும் இருதய பாதிப்பு இருந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை திடீா் உடல் நலக் குறைவு காரணமாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட பழனிவேல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி வெங்கடசுப்பிரமணி அளித்த புகாரின்பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.