கோபில் உள்ள ஒருவா் அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவில் தலைவா், அம்மா படம் இல்லை எனக் கூறி விழாவில் பங்கேற்கவில்லை. ஆனால் இப்போது யாா் படத்தை வைத்து மாற்று கட்சியில் சோ்ந்தீா்கள். கோபியில் அரசு பள்ளி நிகழ்ச்சியில் அம்மா படம், தலைவா் படமும் இல்லை. அதில் கருணாநிதி, ஸ்டாலின் படமும் உள்ளது. அப்போதே அவா் பி டீம் வேலையை ஆரம்பித்துவிட்டாா். பல்வேறு அரசியில் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் ஒன்று கூடி அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு பாராட்டு விழா நடத்தினா். அதை விமா்சித்தவா் தான் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ. கடந்த ஒரு மாதத்திற்கு முன் மனம் திறந்து பேட்டி கொடுத்தாா். கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை சந்தித்தாா். அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவரை மதித்து அவா் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பத்து நாளில் கட்சி ஒருங்கிணைப்பை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் நானே முன்னின்று நடவடிக்கை எடுப்பேன் என தலைமைக்கு எச்சரிக்கை கொடுக்கிறார். தலைமைக்கு எதிராக பேட்டி கொடுத்ததால் கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்தோம். அதன்பின் பசும்பொன் முத்துராமலிங்க தேவா் விழாவில் பங்கேற்றபோது பொதுக்குழுவால் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்திற்கு எதிராக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவோரோடு சென்றாா். அதனால் அவா் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து நீக்கப்ட்டாா்.