
மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை வேறு காவல் நிலையத்திற்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்தது.
காவல் துறையினரின் வாகனத்திற்கு தீயிட்ட போராட்டக்காரர்கள், கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் காவல் துறையினர், பத்திரிகையாளர்கள் என பலர் படுகாயம் அடைந்தனர்.
அஸ்ஸாமின் பக்சா மாவட்டத்திற்குட்பட்ட முஷால்பூர் பகுதியில் நடந்த இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைக்க முயன்றனர்.
ஸுபீன் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் இன்று நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதால், புதிதாக கட்டப்பட்ட பக்சா மாவட்டத்தின் சிறைச்சாலைக்கு காவல் துறையினர் அவர்களை அழைத்துச் சென்றபோது, போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால், கைது செய்யப்பட்டவர்களை பாதுகாப்பதில் காவல் துறை கவனம் செலுத்தியது.
பாதுகாப்பு காரணங்களுக்காக குவாஹாட்டி சிறையில் இருந்து புதிதாகவும் பாதுகாப்பு அம்சங்களுடனும் கட்டப்பட்டுள்ள பக்சா சிறைக்கு கைது செய்யப்பட்டவர்கள் மாற்றப்பட்டனர். கடந்த ஜூன் 21ஆம் தேதி இந்த சிறைச்சாலையை ஹிமந்த பிஸ்வ சர்மா திறந்து வைத்தார்.
ஸுபீன் மரண வழக்கில் கைதானவர்கள் இந்த சிறைக்கு அழைத்துச்செல்லப்படுவதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அந்தக் காவல் நிலையத்தின் முன்பு ஸுபீன் ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பக்சா மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது.
இதையும் படிக்க | மாஸ்கோவில் புதினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.