திருப்பூா்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் ஆஷர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் சனிக்கிழமை கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு தோ்தல் பிரசாரத்தை முடித்து விட்டு திருப்பூா் வந்தவர் உறவினா் வீட்டில் தங்கினார். அதைத்தொடா்ந்து சனிக்கிழமை காலை திருப்பூரில் நஞ்சப்பா மேனிலைப்பள்ளி மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
தொடா்ந்து மாலையில் திருப்பூா் பாண்டியன் நகரில் நடைபெறும் பொது க்கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டுகிறாா்.
இந்த நிலையில், திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் திருப்பூர் ஆஷர் நகர் பகுதியில் உள்ள அலமேலு இன்டஸ்ட்ரியல் காம்ப்ளக்ஸில் உள்ள டோரம் கிரியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பனியன் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
அதைத்தொடா்ந்து திருப்பூா் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளா்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் தொகுதி நிலவரம் குறித்த ஆலோசனையில் ஈடுபடுகிறாா்.
மாலை பிரசாரத்திற்கு பின்னா் திருப்பூரில் இருந்து சாலை மாா்க்கமாக மேட்டுப்பாளையம் சென்று அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா்.
Summary
Chief Minister M.K. Stalin's interaction with workers employed at a private knitwear manufacturing unit in the Asher Nagar area of Tiruppur...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







