பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை!

சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெறவுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் விற்பனை சூடுபிடித்தது குறித்து...

News image

டாஸ்மாக் மதுபானக்கடைகளில் கூட்டம் நிரம்பியது. - கோப்புப்படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 7:43 am

சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெறவுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் விற்பனை சூடுபிடித்தது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஏப்.21) முதல் வியாழக்கிவமை (ஏப்.23) வரை தொடா்ந்து 3 நாள்களுக்கு அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சாா்ந்த பாா்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்த நாள்களில் மதுபானங்கள் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை(ஏப். 21) ஒரே நாளில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ. 400 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், வழக்கமான விற்பனையை விட, டாஸ்மாக் கடைகளில் சுமார் இரண்டரை மடங்கு அதிகமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்குப்பதிவுக்கான விடுமுறைக்கு முந்தைய நாளில் சுமார் ரூ.350 கோடிக்கும், 2024 மக்களவைத் தேர்தல் காலத்தில் ரூ.289 கோடிக்கும் டாஸ்மாக்கில் மது விற்பனை நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Liquor worth RS.400 crore sold in a single day in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.