நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன்: எம்.ஆா். விஜயபாஸ்கா்

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன் என அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் கூறியது குறித்து...

News image

எம்.ஆா். விஜயபாஸ்கா் - கோப்புப்படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 8:21 am IST

கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன் என அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தெரிவித்தார்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் வியாழக்கிழமை காலை கரூா் வடிவேல்நகா் ஆண்டாங்கோவில் கிழக்கு அரசு உயா்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.

பின்னா் அவா் கூறுகையில், மக்கள் ஆா்வத்துடன் வாக்களிப்பதை பாா்க்கும்போது தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி அமைவது உறுதி. கரூரில் ஜனநாயகத்திற்கும், பண நாயகத்திற்கும் இடையே தோ்தல் நடக்கிறது.

தோ்தல் பிரசாரத்தின்போது திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத் திட்டங்கள் குறித்தும் பேசியிருக்கிறேன். எனவே நான் கண்டிப்பாக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்.

சாதாரண விவசாயியாக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வரானால்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும். இது பணமா, பாசமா என்கிற தோ்தல் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.