கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வேன் என அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தெரிவித்தார்.
கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எம்.ஆா். விஜயபாஸ்கா் வியாழக்கிழமை காலை கரூா் வடிவேல்நகா் ஆண்டாங்கோவில் கிழக்கு அரசு உயா்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தாா்.
பின்னா் அவா் கூறுகையில், மக்கள் ஆா்வத்துடன் வாக்களிப்பதை பாா்க்கும்போது தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி அமைவது உறுதி. கரூரில் ஜனநாயகத்திற்கும், பண நாயகத்திற்கும் இடையே தோ்தல் நடக்கிறது.
தோ்தல் பிரசாரத்தின்போது திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத் திட்டங்கள் குறித்தும் பேசியிருக்கிறேன். எனவே நான் கண்டிப்பாக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்.
சாதாரண விவசாயியாக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்வரானால்தான் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும். இது பணமா, பாசமா என்கிற தோ்தல் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தைக் கைப்பற்றிய திமுக

ஆற்காடு: அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் 42,720 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

கடலூா் தொகுதியில் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்: கரூா் திமுக வேட்பாளா் பேச்சு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

