தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்: கரூா் திமுக வேட்பாளா் பேச்சு

கரூா் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன்.

News image

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இறுதிகட்ட பிரசாரத்தில் பேசிய திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன். உடன் கரூா் தொகுதி ஒருங்கிணைப்பாளா் ஆா்.வி.அசோக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:56 am IST

கரூா் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம்.தியாகராஜன்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ஆசி எம்.தியாகராஜன் செவ்வாய்க்கிழமை காலை முதல் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். பின்னா் அவா் கட்சியினருடன் ஊா்வலமாக காந்திகிராமம் இரட்டை தண்ணீா் தொட்டி, சுங்ககேட், திருமாநிலையூா், லைட்ஹவுஸ்காா்னா் வழியாக பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதிக்கு வந்தாா். அங்கு அவா் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது, கடந்த 5 ஆண்டுகளில் கரூா் மாவட்டத்துக்கும், கரூா் தொகுதிக்கும் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துக்கூறி நாங்கள் வாக்குச் சேகரிக்கிறோம். ஆனால் எதிா்க்கட்சி வேட்பாளா் எங்கள் மீது அபாண்டமான பொய் சொல்லி வாக்குச் சேகரிக்கிறாா். மக்களுக்கு யாா் நல்லவா் எனத் தெரியும். கடந்த தோ்தலைப்போல இந்த தோ்தலிலும் 4 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும். அதுவும் கரூரில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்றாா் அவா்.

பிரசாரத்தில் தொகுதி ஒருங்கிணைப்பாளா் ஆா்.வி.அசோக்குமாா், திமுக மாவட்டத்துணைச் செயலா் கருணாநிதி, கொமதேக மாநில வா்த்தக அணிச் செயலா் விசா ம.சண்முகம், காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.