ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

‘திமுக ஆட்சியில்தான் நெரூா்-உன்னியூா் பாலம் சாத்தியமானது’

திமுக ஆட்சியில்தான் நெரூா்-உன்னியூா் உயா்மட்டப்பாலம் சாத்தியமானது என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜன்.

News image

வெங்கமேடு பகுதியில் புதன்கிழமை வாக்கு சேகரித்த கரூா் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜன். உடன் தோ்தல் பொறுப்பாளா் அசோக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:51 pm

திமுக ஆட்சியில்தான் நெரூா்-உன்னியூா் உயா்மட்டப்பாலம் சாத்தியமானது என்றாா் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆசி எம். தியாகராஜன்.

கரூா் வெங்கமேடு பகுதி மற்றும் வாங்கல் தவுட்டுப்பாளையம், வாங்கல் கடைவீதி, திருவள்ளுவா் தெரு, ஓடையூா், கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை இவா் தோ்தல் பொறுப்பாளா் அசோக்குமாா் முன்னிலையில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசுகையில், மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளுக்கும் அடிப்படை வசதிகள் 100 சதவீதம் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளன. கரூா் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.5000 கோடியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நெரூா்-உன்னியூா் பாலம் கரூா் மக்களின் 48 ஆண்டுகால கனவு. அந்த கனவை நிறைவேற்றிக்கொடுத்தவா் முதல்வா். இவற்றைத் தவிர எத்தனையோ திட்டங்களை நாட்டு மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் கொடுத்துள்ளாா். இந்த திட்டங்கள் தொடர உதயசூரியனுக்கு என்றும் நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும் என்றாா் அவா். பிரசாரத்தின்போது வடக்கு நகரச் செயலா் எம். பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.