மூத்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் காலமானார்
தமிழ்நாட்டின் மூத்த கல்வியாளரும் ஆசிரியருமான முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் (95) செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
தமிழ்நாட்டின் மூத்த கல்வியாளரும் ஆசிரியருமான முனைவர் எஸ்.எஸ். ராஜகோபாலன் வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் சென்னை கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு (பிப்.3) 11.54 மணிக்கு மருத்துவமனையில் காலமானார்.
அவரது உடல் மருத்துவ ஆய்வுக்கு ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை ஒப்படைக்கப்படுகிறது.
1950 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்து 1990-ல் ஓய்வுபெற்றார். கல்வி மேம்பாட்டிற்காக பாடுபட்ட அவர் சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக தனது பங்களிப்பை செலுத்தியவர்.
கருணாநிதி முதல்வராக இருந்த போது சமச்சீர் கல்வி உருவாக்கிட அமைக்கப்பட்ட குழுவில் உறுப்பினராக இருந்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கியவர்.
வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் தரமான கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாடுபட்டவர். கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் சமூகப் பார்வை கொண்ட கருத்துகளுக்காக அறியப்பட்டவர்.
சிறந்த ஆசிரியர், கல்வியாளர், அவரது சமூகப் பார்வை இன்றைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது.
கல்வி தொடர்பான கட்டுரைகளை தினமணி நாளிதழில் தொடர்ந்து எழுதி வந்தவர். நாளிதழ்களில் வாசகர் கடிதங்கள் இடையறாமல் தொடர்ந்து எழுதி அவற்றை அர்த்தமுள்ள கருத்து பரிமாற்ற மேடையாக்கியவர் ஐயா ராஜகோபாலன்.
அவரது மறைவுக்கு கல்வித்துறைக்கு ஒரு பேரிழப்பாகும்.
Regarding the passing of Dr. S.S. Rajagopalan (95), a senior educationist and teacher from Tamil Nadu...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

