4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மத்திய அரசு நினைத்தால் வாக்காளர்களை நீக்க முடியும்: மமதா குற்றச்சாட்டு!

மத்திய அரசு நினைத்தால் வாக்காளர்களை நீக்க முடியும் என மேற்கு வங்க முதல்வர் குற்றச்சாட்டு...

News image
மமதா பானர்ஜி- கோப்புப் படம்
Updated On :11 மார்ச் 2026, 11:53 am

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய அரசு நினைத்தால் வாக்காளர்களை நீக்க முடியும் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக எரிவாயு இறக்குமதி முடங்கியுள்ளதால், நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணவகங்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்கள் உடன் பேசிய முதல்வர் மமதா கூறியதாவது:

“மத்திய அரசு நினைத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) என்ற பெயரில் தகுதியுள்ள வாக்காளர்களை நீக்க முடியும். ஆனால் நாட்டின் எரிவாயு, எண்ணெய் இருப்புக்களை நிர்வகிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நடைமுறையை எதிர்த்து உள்ளிருப்புப் போராட்டம் அறிவித்ததன் பேரில், கொல்கத்தாவின் முக்கிய பகுதியான தர்மதலாவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) முதல் கடந்த ஐந்து நாட்களுக்கு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.