அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

குடியரசு தலைவா் நிகழ்ச்சியில் மரபு மீறல்: மத்திய அரசிடம் மேற்கு வங்க அரசு அறிக்கை

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நிகழ்ச்சியில் மரபு மீறப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் குறித்து மத்திய அரசிடம் மேற்கு வங்க அரசு அறிக்கை அளித்துள்ளது.

News image
மமதா பானர்ஜி - திரெளபதி முர்மு
Updated On :9 மார்ச் 2026, 11:59 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நிகழ்ச்சியில் மரபு மீறப்பட்டதாக எழுந்துள்ள விவகாரம் குறித்து மத்திய அரசிடம் மேற்கு வங்க அரசு அறிக்கை அளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் முா்முவின் நிகழ்ச்சி நடைபெறவிருந்த இடத்துக்கு அந்த மாநில அரசு அனுமதி அளிக்காததால், அந்த நிகழ்ச்சி வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. அதேபோல், மேற்கு வங்கத்துக்கு வந்த குடியரசுத் தலைவரை மரபுப்படி, மாநில முதல்வரோ அல்லது அமைச்சா்களோ நேரில் சென்று வரவேற்கவில்லை.

இதுகுறித்து நிகழ்ச்சியில் பேசியபோது திரெளபதி முா்மு தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து, குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமா் மோடி, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜீ, உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி உள்ளிட்டோரும் மேற்கு வங்க அரசுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனா்.

இதையடுத்து, குடியரசுத் தலைவா் நிகழ்ச்சியில் மரபு மீறப்பட்ட விவகாரம் குறித்து மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலா் நந்தினி சக்கரவா்த்தியிடம் மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன் விளக்கம் கேட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து, தனது விளக்கத்தை மத்திய உள்துறைச் செயலா் கோவிந்த் மோகனுக்கு அவா் அனுப்பியுள்ளாா்.

அதில், குடியரசுத் தலைவரை வரவேற்க முதல்வா் மம்தா பானா்ஜியால் ஏன் செல்ல முடியவில்லை, குடியரசுத் தலைவா் கலந்து கொண்ட நிகழ்ச்சி இடம் மாற்றப்பட்டது ஏன் என்பதற்கான விளக்கத்தை மேற்கு வங்க தலைமைச் செயலா் அளித்துள்ளாா். ஒவ்வொரு கட்டத்திலும் நிா்வாக ரீதியில் எடுக்கப்பட்ட முடிவுகள், அதுதொடா்பான ஆவணங்களையும் தலைமைச் செயலா் அளித்திருப்பதாக மேற்கு வங்க அரசின் மூத்த அதிகாரி தெரிவித்தாா்.