விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடி உயர்நிலை கூட்டம்!

பெட்ரோலியம், கச்சா எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரத் துறைகளின் தட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர்நிலை ஆலோசனை குறித்து...

News image

சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக மோடி உயர்நிலை ஆலோசனை - கோப்புப்படம்

Updated On :22 மார்ச் 2026, 6:41 pm IST

அமெரிக்கா-இஸ்ரேஸ், ஈரான் போர் காரணமாக பெட்ரோலியம், கச்சா எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரத் துறைகளின் தட்டுப்பாடுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர்நிலை ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த பிப். 28 முதல் தொடங்கிய ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்கள் மற்றும் அதற்கு ஈரான் படைகளின் எதிர்வினை ஆகியவற்றால் மேற்காசிய பிராந்தியத்தில் பெரும்பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், பெட்ரோலியம், கச்சா எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரத் துறைகளில் நிலவும் தட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை உயர்நிலைக் கூட்டம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

புது தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் தடையற்ற எரிபொருள் விநியோகம், நிலையான தளவாடங்கள் மற்றும் திறமையான விநியோகத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வேளாண்மை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் ஜே.பி. நட்டா, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு, மின்சார அமைச்சர் மனோகர் லால் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Summary

PM Narendra Modi today chaired a high-level meeting to review the situation in the petroleum, crude oil, gas, power, and fertiliser sectors amid the evolving West Asia situation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.