திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

தேர்தலில் எனது மகன் போட்டியிடவில்லை: கே.வி.தங்கபாலு திட்டவட்டம்

வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எனது மகன் போட்டியிடவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு கூறியது குறித்து...

News image

சென்னையில் செய்தியாளர்களுக்கு போட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு

டிஎன்எஸ்

Updated On :28 மார்ச் 2026, 8:14 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எனது மகன் போட்டியிடவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு திட்டவட்டமாக தெரிவித்தார்.

விடுதலைப் போராட்ட வீரர் தீரர் சத்தியமூர்த்தியின் 84 ஆவது நினைவு நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கும் அலுவலகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள சிலைக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே வி தங்கபாலு தலைமையில் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர்கள் சொர்ணா சேதுராமன், அழகு ஜெயபால், மாநில அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாவட்ட தலைவர்கள் கராத்தே செல்வம், திலகர், மாநில பொதுச் செயலாளர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய கே. வி. தங்கபாலு, திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 18 தொகுதிகளில் 16 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுவிட்டது. 7 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது, 5 தொகுதிகளுக்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தொகுதிகள் தேர்வில் எவ்வித வெளிப்படை தன்மையும் இல்லை என கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்திருந்தது குறித்த கேள்விக்கு, உள்கட்சி விவகாரங்களை பொது வெளியில் நான் பேசுவது கிடையாது. உள் அரங்கத்தில் பேச வேண்டிய விவகாரத்தை ஜனநாயக முறையில் பேசுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.

ஆகவே நண்பர்கள் தேர்தல் நேரத்தில் பொது வெளியில் கவனமாக பேச வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

மேலும், ஜி.கே வாசன் காங்கிரஸ் கட்சியால் வளர்க்கப்பட்டு பல பதவி சுகங்களை அனுபவித்தவர். இப்போது பாஜக பக்கம் சென்று விட்டார். அவரிடம் நாம் எதை எதிர்பார்க்க முடியும்.

இந்த தேர்தலில் எனது மகன் போட்டியில்லை என அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.