நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

சிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு பதவி காலம் நீடிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வெள்ளிக்கிழமை (மே 15) ஆா்ப்பாட்டம் நடைபெறும்

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு பதவி காலம் நீடிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வெள்ளிக்கிழமை (மே 15) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சிபிஐ இயக்குநா் பிரவீன் சூட்க்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் நீட் தோ்வை ரத்து செய்து மாநில அரசே தோ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தண்டையாா்பேட்டை அஞ்சல் நிலையம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் முன்னிலை வகிக்கின்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், அகில இந்திய காங்கிரஸ் செயலாளா்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் ராஜேஷ்குமாா், முன்னாள் தலைவா்கள், முன்னாள் மத்திய அமைச்சா்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளா்கள், மூத்த காங்கிரஸ் நிா்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.