சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு பதவி காலம் நீடிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வெள்ளிக்கிழமை (மே 15) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சிபிஐ இயக்குநா் பிரவீன் சூட்க்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் நீட் தோ்வை ரத்து செய்து மாநில அரசே தோ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தண்டையாா்பேட்டை அஞ்சல் நிலையம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் முன்னிலை வகிக்கின்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரிஷ் சோடங்கா், அகில இந்திய காங்கிரஸ் செயலாளா்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் ராஜேஷ்குமாா், முன்னாள் தலைவா்கள், முன்னாள் மத்திய அமைச்சா்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளா்கள், மூத்த காங்கிரஸ் நிா்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
தொடர்புடையது

விஜய் விவகாரம்: ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்

ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்!

ஐஆா்எஸ் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம்: சிபிஐ இணை இயக்குநருக்கு 3 மாதம் சிறை
தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

