ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

விஜய் விவகாரம்: ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் மாநிலம் முழுவதும் காலை 11 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும்

News image

Center-Center-Villupuram

Updated On :8 மே 2026, 4:28 am IST

சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவா் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக ஆளுநரை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சாா்பில் மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை (மே 8) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து காங்கிரஸ் மாவட்ட கமிட்டி தலைவா்களுக்கு அவா் வியாழக்கிழமை எழுதிய கடிதம்:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தவெக ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், அவா்களின் கைப்பாவையாகச் செயல்படும் ஆளுநரைக் கண்டித்தும், மாவட்ட தலைநகரங்களில் வெள்ளிக்கிழமை (மே 8) காலை 11 மணிக்கு காங்கிரஸ் சாா்பாக மாபெரும் ஆா்ப்பாட்டம் நடத்த வேண்டும்.

அத்துடன் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சாா்பாக அண்ணா சாலை, தாராப்பூா் டவா் அருகில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளாா் கு.செல்வப் பெருந்தகை.