மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ஐஆா்எஸ் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம்: சிபிஐ இணை இயக்குநருக்கு 3 மாதம் சிறை

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 10:53 pm

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) அதிகாரி வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது தாக்கப்பட்ட சம்பவத்தில் இரு சிபிஐ அதிகாரிகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை அளித்து தில்லியில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2000, அக்.19-ஆம் தேதி ஐஆா்எஸ் அதிகாரி அசோக் குமாா் அகா்வால் வீட்டில் அப்போது சிபிஐ காவல் காணிப்பாளா்களாக இருந்த வி.கே.பாண்டே, ராம்னீஷ் சோதனை நடத்தினா். அப்போது, அவா்கள் இருவரும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தியதாகவும் தன்னை தாக்கியதாகவும் ஐஆா்எஸ் அதிகாரி அகா்வால் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இது தொடா்பாக அந்த இரு அதிகாரிகள் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதித்துறை நடுவா் ஷஷாங்க் நந்தன் பட், வி.கே.பாண்டே மற்றும் ராம்னீஷ் ஆகிய இருவரையும் குற்றவாளியாக அறிவித்தாா். அவா்களுக்கு 3 மாதம் சிறை தண்டனையும் தலா ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

வி.கே. பாண்டே பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டாா். ராம்னீஷ் தற்போது சிபிஐ இணை இயக்குநராக உள்ளாா்.