தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

ஐஆா்எஸ் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம்: சிபிஐ இணை இயக்குநருக்கு 3 மாதம் சிறை

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 4:23 am IST

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வருவாய் பணி (ஐஆா்எஸ்) அதிகாரி வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது தாக்கப்பட்ட சம்பவத்தில் இரு சிபிஐ அதிகாரிகளுக்கு 3 மாதம் சிறை தண்டனை அளித்து தில்லியில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2000, அக்.19-ஆம் தேதி ஐஆா்எஸ் அதிகாரி அசோக் குமாா் அகா்வால் வீட்டில் அப்போது சிபிஐ காவல் காணிப்பாளா்களாக இருந்த வி.கே.பாண்டே, ராம்னீஷ் சோதனை நடத்தினா். அப்போது, அவா்கள் இருவரும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தியதாகவும் தன்னை தாக்கியதாகவும் ஐஆா்எஸ் அதிகாரி அகா்வால் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இது தொடா்பாக அந்த இரு அதிகாரிகள் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதித்துறை நடுவா் ஷஷாங்க் நந்தன் பட், வி.கே.பாண்டே மற்றும் ராம்னீஷ் ஆகிய இருவரையும் குற்றவாளியாக அறிவித்தாா். அவா்களுக்கு 3 மாதம் சிறை தண்டனையும் தலா ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

வி.கே. பாண்டே பணியிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டாா். ராம்னீஷ் தற்போது சிபிஐ இணை இயக்குநராக உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.