வணிக பயன்பாட்டிற்கான விலை உயர்வுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் கடந்த மார்ச் மாதம் ரூ.144-ம், ஏப்ரல் மாதம் ரூ. 203-ம் உயர்த்தப்பட்ட நிலையில், மே 1 ஆம் தேதி மேலும் ரூ.933 உயர்த்தப்பட்டு ஒரு சிலிண்டர் ரூ.3,239 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க - ஈரான் போரால் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய பாஜக அரசு வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலையை ஒரேடியாக சுமார் ரூ.1000 அதிகரித்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
கடந்த இரண்டு மாதங்களாக சமையல் எரிவாயு விநியோகம் தடைப்பட்டதால் உணவகங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்ததுடன், உணவுப் பொருள்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துவிட்டது.
இந்த நிலையில், வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலை உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும். உடனடியாக மத்திய அரசு இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
Summary
MDMK General Secretary Vaiko has condemned the price hike for commercial use...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











