பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

நேபாளத்தில் தரையிறங்கிய துருக்கி விமானத்தில் தீ விபத்து!

நேபாளத்தில் தரையிறங்கிய துருக்கி விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி...

News image

துருக்கி விமானத்தில் தீ விபத்து - X

Updated On :11 மே 2026, 11:31 am IST

துருக்கியில் இருந்து வந்த விமானம் நேபாளத்தில் தரையிறங்கியபோது விமானத்தின் டயரில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து நேபாளத்துக்கு வந்த துருக்கி ஏர்லைன் விமானம்(டிகே 726) காத்மாண்டு விமான நிலையத்தில் இன்று காலை 6.45 மணிக்கு தரையிறங்கியபோது திடீரென விமானத்தின் டயரில் தீ பிடித்தது.

இந்த விமானத்தில் 277 பயணிகள் மற்றும் விமானிகள் உள்பட 11 ஊழியர்கள் என மொத்தம் 288 பேர் பயணித்துள்ளனர்.

விமானத்தின் டயரில் தீ பற்றியதையடுத்து உடனடியாக விமானத்தில் உள்ள அனைவரும் அவசரமாக தரையிறக்கப்பட்டனர். விமானத்தில் எமெர்ஜன்சி கதவுகள் வழியாக பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். சிலர் மட்டும் லேசான காயத்துடன் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசரகால நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பல்வேறு முக்கிய பிரதிநிதிகள் இதில் பயணித்துளினது குறிப்பிடத்தக்கது.

Summary

Turkish Airlines plane tyre catches fire during landing in Nepal's Kathmandu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.