தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

நீண்ட கால நல்லுறவிற்கு இதுதான் அவசியம்!

நம் வாழ்க்கையில் வரும் உறவுகள் சில, வாழ்நாள் இறுதி வரை தொடரும்; சில உறவுகள் பாதியிலே நின்று விடும். சில உறவுகள் தொடங்கிய சில வருடங்களிலே கூட நின்று விடலாம்.

News image
Updated On :3 நவம்பர் 2019, 4:01 pm IST

நம் வாழ்க்கையில் வரும் முக்கியமான உறவுகள் சில, வாழ்நாள் இறுதி வரை தொடரும்; சில உறவுகள் பாதியிலே நின்று விடும். சில உறவுகள் தொடங்கிய சில வருடங்களிலே கூட நின்று விடலாம். ஒரு உறவு நீண்ட காலமாக (Long Term Relationship) தொடர வேண்டும் என்றால் அதற்கு அடிப்படை அன்பு, கருணை(Kindness) மட்டுமே என்று ஆராய்ச்சி ஒன்றின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

'Journal of Personality' என்ற ஆன்லைன் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் இதுகுறித்த ஒரு ஆய்வின் முடிவை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்காக, உலகம் முழுவதிலும் இருந்து 2,700 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, தங்களது வாழ்க்கைத் துணை அல்லது காதலரின் பண்புகள் குறித்து கேட்ட்டறிந்தனர். 

இதில், உடல் கவர்ச்சி மற்றும் பணம் ஆகியவை முக்கியமாகப் பார்க்கப்பட்டாலும் அன்பை அதிகம் பேர் எதிர்பார்க்கின்றனர் என்றும் அன்பிற்கே முன்னுரிமை அளிக்கின்றனர் என்றும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. 

Story image

மிகவும் மாறுபட்ட கலாச்சாரங்கள் தற்போது பரவி வருவதனால் இதுகுறித்த ஒரு ஆய்வை மேற்கொள்ள விரும்பி அதனை செயல்படுத்தியுள்ளோம் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறினார்.  ஆனால், கலாச்சாரம் என்னதான் வேகமாக மாறி வந்தாலும், அன்பு, காதலுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர் என்று தெரிவித்தார். 

சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட கிழக்கு நாடுகளின் மாணவர்கள் மற்றும் இங்கிலாந்து, நார்வே மற்றும் ஆஸ்திரேலியா போன்ற மேற்கத்திய நாடுகளின் மாணவர்களின் விருப்பங்களும் இதில் அடங்கியுள்ளன. 

உடல் கவர்ச்சி, நிதி தேவை, அன்பு, நகைச்சுவை, கற்பு, மதவாதம், குழந்தை ஆசை மற்றும் படைப்பாற்றல் ஆகிய பண்புகளை வைத்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், இதற்காக அவர்கள் செலவு செய்யும் தொகையும் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுவாக தங்கள் மொத்த பட்ஜெட்டில் 22 முதல் 26% அன்புக்காகவும், தங்கள் பட்ஜெட்டின் பெரும்பகுதியை உடல் கவர்ச்சிக்காகவும் மற்றும் நிதி வருவாய்க்காகவும்  செலவிடுகின்றனர்.

Story image

படைப்பாற்றல் மற்றும் இதர பண்புகளுக்காக 10 சதவீதத்திற்கும் குறைவாகவே செலவிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மேற்கத்திய பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். 

ஒரு உறவு நீண்ட காலமாக தொடர வேண்டும் என்றால் அன்பு ஒன்றே அடிப்படை ஆதாரம். அன்பு செலுத்தி உங்களது உறவைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள்..

Related Article

குழந்தை சுஜித்தை வைத்து லாபம் பார்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்கள்! கோபத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

உங்களுக்கு மட்டும் இல்லீங்க.. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே தூக்கம் இல்லையாம்..!

டிராஃபிக் அதிகமா இருக்குற ஏரியால வசிக்கிறீங்களா? பக்கவாதம் வர வாய்ப்பிருக்கு.. கவனமா இருங்க..

குழந்தைகளுக்கு 'மல்டி டாஸ்க்கிங்' இருப்பது நல்லதா? கெட்டதா?

காபி பிரியரா நீங்கள்? அப்படினா இது உங்களுக்குத்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.