பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உங்கள் கண்களில் கருவளையம் முற்றிலும் நீங்க சில எளிய பயிற்சிகள்!

கருவளையம் கண்களுக்கு திருஷ்டி போல் இருக்கும். சரியாக தூங்காமல், சிறு வயதிலிருந்தே கண்களுக்கு

News image
Updated On :16 ஆகஸ்ட் 2018, 6:11 am

தினமணி

கருவளையம் கண்களுக்கு திருஷ்டி போல் இருக்கும். சரியாக தூங்காமல், சிறு வயதிலிருந்தே கண்களுக்கு ஓவர் டைம் வேலை கொடுத்து அல்லது எப்பவும் டிவி, மொபைல் என்றிருந்தால்  கண்களைச் சுற்றி கருவளையம் வந்துவிடும்.  

கருவளையம் நரம்புகளின் பலவீனத்தாலும் இறந்த செல்கள் வெளியேறாமல் சருமத்திலேயே தங்கிவிடுவதாலும் உண்டாகும். இதனால் சிறு வயதிலேயே வயதான தோற்றம் அமைந்துவிடும்.  இதற்கு கண்களின் மீது  உருளைக் கிழங்கு, வெள்ளரிக்காய்,  தக்காளி என  வைத்தால் பலனளிக்கும்.  

சின்ன சின்ன பயிற்சிகள்  மூலமும் கருவளையத்தைப் போக்கிக் கொள்ளலாம். இந்தப் பயிற்சிகளினால் கண்பார்வை தெளிவாகும். நரம்புகள் ஊக்கம் பெறும், கண்கள் சுருக்கங்கள் மறைந்து  அழகு பெறும்.  

Story image

பயிற்சிகளை இப்போது கண்போம்:

பயிற்சி- 1 : கண்களை எவ்வளவு இறுக்க மூட  முடியுமோ, அவ்வளவு இறுக்க மூடி, அதே அளவு திறக்க வேண்டும். இப்படி மூன்று முறை செய்யவும்.       

பயிற்சி- 2 : கண்களை மேலிருந்து வலப்புறமாக சுழற்றவும் இது போல் ஐந்து முறை செய்யவும்.  இடப்புறமாக அதே போன்று  சுழற்றவும். ஐந்து முறை செய்ய வேண்டும்.

பயிற்சி- 3 : இரு கண்களையும் உள்ளங்கையால் மூடி சில நொடிகள் கழித்து திறந்திடுங்கள். இவ்வாறு ஐந்து முறை செய்ய வேண்டும்.

பயிற்சி 4 : இரவு தூங்குவதற்கு முன் கண்களைச் சுற்றி லேசாக கைகளால் ஒத்தி எடுக்க வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். விளக்கெண்ணெய் இருந்தால் அதனை கொண்டு  கண்களைச் சுற்றி மசாஜ் செய்யலாம்.

மேலே கூறியவைகளை விடாமல் தினமும் செய்து கொண்டு வந்தால், சில நாள்களில் கருவளையம் மறைவதை காண்பீர்கள். கண்களும் அழகாக காட்சியளிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.