ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

மென்மையான சருமத்திற்கு 'வாழைப்பழம்-தயிர் பேஸ் பேக்'

குளிர்காலம் வந்துவிட்டதால் பெரும்பாலான பெண்களுக்கு சருமப் பிரச்னைகளும் ஆரம்பித்திருக்கும். சருமம் வறண்டு போதலைத் தடுக்க சருமம் மென்மையாக பொலிவாக இருக்க ஒரு இயற்கையான பேஸ் பேக் குறித்து பார்க்கலாம். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 11:04 am IST

குளிர்காலம் வந்துவிட்டதால் பெரும்பாலான பெண்களுக்கு சருமப் பிரச்னைகளும் ஆரம்பித்திருக்கும். குளிர்காலத்தில் சுற்றுப்புறச்சூழல் காரணமாகவும் தண்ணீர் உடலில் குறைவாக சேர்வதாலும் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. இதனால் சருமம் வறண்டு போகிறது. 

சருமம் வறண்டு போதலைத் தடுக்கவும், சருமம் மென்மையாக பொலிவாக இருக்க ஒரு இயற்கையான பேஸ் பேக் குறித்துப் பார்க்கலாம். 

வாழைப்பழம் - தயிர் பேஸ் பேக் 

நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தின் சிறு பகுதியை எடுத்து பிசைந்து கொள்ளுங்கள் அல்லது மிக்சியில் நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். இத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலக்கவும். அதன்பின்னர் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். மூன்றையும் நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். 

முகத்தை ஒருமுறை கழுவிவிட்டு இப்போது இந்த பேக்கை அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் அல்லது முற்றிலும் காயும் வரை உலரவிட்டு பின்னர் வெதுவெதுப்பான நீர் கொண்டு அலசவும். சருமம் பளபளப்பாக வாரம் ஒரு முறை செய்து வந்தாலே போதுமானது. ஒரு சில வாரங்களிலேயே மாற்றத்தை உணரலாம். 

வாழைப்பழம் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி சரும அடைப்புகளை சீராக்குகிறது. அதுபோல தேனும் தயிரும் சருமத்திற்கு வழவழப்பைத் தருவதுடன் கருமை நிறம், பருக்கள் ஆகியவற்றை நீக்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.