புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

மென்மையான சருமத்திற்கு 'வாழைப்பழம்-தயிர் பேஸ் பேக்'

குளிர்காலம் வந்துவிட்டதால் பெரும்பாலான பெண்களுக்கு சருமப் பிரச்னைகளும் ஆரம்பித்திருக்கும். சருமம் வறண்டு போதலைத் தடுக்க சருமம் மென்மையாக பொலிவாக இருக்க ஒரு இயற்கையான பேஸ் பேக் குறித்து பார்க்கலாம். 

News image
Updated On :27 நவம்பர் 2021, 4:32 pm IST

குளிர்காலம் வந்துவிட்டதால் பெரும்பாலான பெண்களுக்கு சருமப் பிரச்னைகளும் ஆரம்பித்திருக்கும். குளிர்காலத்தில் சுற்றுப்புறச்சூழல் காரணமாகவும் தண்ணீர் உடலில் குறைவாக சேர்வதாலும் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. இதனால் சருமம் வறண்டு போகிறது. 

சருமம் வறண்டு போதலைத் தடுக்கவும், சருமம் மென்மையாக பொலிவாக இருக்க ஒரு இயற்கையான பேஸ் பேக் குறித்துப் பார்க்கலாம். 

வாழைப்பழம் - தயிர் பேஸ் பேக் 

நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தின் சிறு பகுதியை எடுத்து பிசைந்து கொள்ளுங்கள் அல்லது மிக்சியில் நன்கு அரைத்துக்கொள்ளுங்கள். இத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலக்கவும். அதன்பின்னர் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். மூன்றையும் நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். 

முகத்தை ஒருமுறை கழுவிவிட்டு இப்போது இந்த பேக்கை அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் அல்லது முற்றிலும் காயும் வரை உலரவிட்டு பின்னர் வெதுவெதுப்பான நீர் கொண்டு அலசவும். சருமம் பளபளப்பாக வாரம் ஒரு முறை செய்து வந்தாலே போதுமானது. ஒரு சில வாரங்களிலேயே மாற்றத்தை உணரலாம். 

வாழைப்பழம் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்கி சரும அடைப்புகளை சீராக்குகிறது. அதுபோல தேனும் தயிரும் சருமத்திற்கு வழவழப்பைத் தருவதுடன் கருமை நிறம், பருக்கள் ஆகியவற்றை நீக்குகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.