உலகம் முழுவதிலுமிருந்து நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் குடல் பாதிப்புகளுக்கு உட்பட்ட சுமார் 70,000 நோயாளிகள் அமினோ கிளைக்கோஸைட் ஆண்ட்டி பயோடிக்குகளைப் பயன்படுத்தி வருகிறார்களாம். அவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் சுவாசக் குழாய்களில் நோய் தொற்றுக்காக சக்தி வாய்ந்த ஹெவி டோஸ் ஆன்ட்டி பயோட்டிக்ஸ் எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் பிற நோயாளிகளை விட 4.79 முறை நிரந்தர காது கேளாமை பாதிப்புக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டுள்ளது. இம்மாதிரியான நோயாளிகளை தனிமைப்படுத்தினாலோ அல்லது மன உளைச்சலுக்கு உட்படுத்தினாலோ மன நல வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமிருக்கிறதாம்.