மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மத்திய அமைச்சர் வெறும் கைகளால் புகையிலைக் கறையைக் கழுவினால் அதெப்படி ‘தூய்மை இந்தியா’ வுக்கான முன்னுதாரணம் ஆகும்?!

மத்திய அமைச்சர் ஒருவர், அவரது உதவியாளர்களோ அல்லது இதர துப்புரவுப் பணியாளர்களோ ஸ்கிரப்பர் கொண்டு வந்து தருவதற்குள், அவசரப்பட்டு வெறும் கைகளால் சுவர்களில் இருந்த புகையிலைக் கறைகளை தேய்த்துக் கழுவி சுத்த

News image
Updated On :28 செப்டம்பர் 2017, 5:50 am

RKV

இன்று சில ஊடகங்களில் முக்கியச் செய்தியாக இடம்பெற்றிருந்த செய்தியொன்று, மத்தியச் சுற்றுலாத்துறை அமைச்சரான அல்ஃபோன்ஸ் கண்ணந்தனம் என்பவர் பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டப்பணிகளை செயல்படுத்தும் அமைச்சர்களில் ஒருவராக, டெல்லி மாநகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார். எப்படித் தெரியுமா? அவருடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்ட துப்புறவு ஊழியர்களெல்லாம் கைகளில் பாதுகாப்பு உறை மாட்டிக் கொண்டு துப்புறவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்க மத்திய அமைச்சர் மாத்திரம் வெறும் கைகளாலேயே புகையிலைக் கறை படிந்த சுவர்களைச் சுத்தம் செய்யத் தொடங்கி விட்டாராம். இது அங்கிருந்த மக்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது என சில நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது?! 

சுவர்களில் இருக்கும் புகையிலைக் கறையை நீக்க வேண்டுமானால், அதற்குத் தோதான இரும்பு ஸ்கிரப்பர்கள் கொண்டும் அதற்கான தூய்மை சோப்புகளோ அல்லது திரவங்களையோ பயனப்டுத்தித் தானே சுத்தம் செய்தாக வேண்டும். அதிலும் நீண்ட காலங்களாகச் சுத்தப் படுத்தாமல் சுவர்களில் தங்கி விட்ட புகையிலைக் கறைகளில் நிச்சயம் கிருமிகளின் தாக்கம் இருக்கும். அத்தகைய கறைகளைச் சுத்தம் செய்யும் போது நாட்டின் மத்திய அமைச்சராகப் பட்டவர் கைகளில் பாதுகாப்பு உறை மாட்டிக் கொள்வதோடு அல்லாமல் நீண்ட கைப்பிடி கொண்ட ஸ்கிரப்பர்கள் உபயோகித்து தானே சுத்தம் செய்திருக்க வேண்டும்! அது தானே பொதுமக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகவும் இருந்திருக்கக் கூடும்.

மத்திய அமைச்சர் ஒருவர், அவரது உதவியாளர்களோ அல்லது இதர துப்புரவுப் பணியாளர்களோ ஸ்கிரப்பர் கொண்டு வந்து தருவதற்குள், அவசரப்பட்டு வெறும் கைகளால் சுவர்களில் இருந்த புகையிலைக் கறைகளை தேய்த்துக் கழுவி சுத்தம் செய்த விதம் மக்களுக்கு எந்த விதத்தில் பயனளிக்கக் கூடும்?! வெறுமே பரபரப்பான பேச்சுக்கு மட்டுமே இம்மாதிரியான விஷயங்கள் இடமளிக்கக் கூடும். இதெல்லாம் தூய்மை இந்தியா நிர்வாகிகளுக்குத் தெரியாதா? திட்டத்துக்கான பெயரை ‘தூய்மை இந்தியா’ என வைத்துக் கொண்டு எது உண்மையான தூய்மை எனத் தெரியாமல் செயல்பட்டால் எப்படி?!

Thanks to NDTV.Com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.