நெகிழ்ச்சியான சம்பவம் இது! தாய்க்கு மகள் கொடுத்த அழகான பரிசு!

ஏர் இந்தியாவில், விமானப்பணிப் பெண்ணாக  பணிபுரிந்தவர் பூஜா சின் சான்கர். ஒரு தாய் தான் நல்ல
நெகிழ்ச்சியான சம்பவம் இது! தாய்க்கு மகள் கொடுத்த அழகான பரிசு!
Published on
Updated on
1 min read

ஏர் இந்தியாவில், விமானப் பணிப் பெண்ணாக  பணி புரிந்தவர் பூஜா சின் சான்கர். ஒரு தாய் தான் நல்ல நிலையில் இருந்தால் அதேபோன்று, தன் மகளும் இருக்க வேண்டும் என விரும்புவார்.

அந்த வகையில், பூஜா சின் சான்கரின் மகள் அஷ்ரிதாவும்,  ஏர் இந்தியாவில்தான் பணிபுரிகிறார். ஆனால் விமானப் பணிப்பெண்ணாக அல்ல,  விமானியாக உள்ளார்.

இந்த நிலையில்,  பணி ஒய்வு பெறும் தாய்க்கு,  ஒரு நூதன ஆசை.  தன்  மகள் விமானம்  ஓட்ட,  தனது இறுதி நாள் வேலையை அதில் நிறைவு செய்ய வேண்டும் என்று.

இது பற்றி, ஏர் இந்தியாவிற்கு ஒரு கோரிக்கையாக, பூஜா வைத்தபோது, நிர்வாகம் அதனை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டது. 

பூஜா கடைசி நாள் வேலையை  நிறைவு  செய்த விமானத்தை, அவருடைய  மகள் அஷ்ரிதாவே ஓட்டினார்.  பலன்... ஓய்வு பெற்ற தாயை வரவேற்க வேண்டிய மகள், தானே .. தாயை, ஓய்வுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com