மழைக்கு இதமாக ஒரு சூடான தேநீர் பகலிலும், இரவில் உறங்க சுகமான ஒரு கம்பளியும் இருந்தால் குளிரிலிருந்து எளிதாக தப்பிவிடலாம். மழை மற்றும் குளிர் காலங்களில் கம்பளி போர்வையை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும்.
மழைக் காலத்த்தில் வெளியே உலர்த்த முடியாது. மேலும் காற்றில் இருக்கும் ஈரத்தன்மை கம்பளி துணியில் ஒருவித வாடையை ஏற்படுத்திவிடும். வீட்டினுள் உலர்த்தினால் அந்த ஈரத்தன்மை கம்பளி போர்வையில் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவிற்கு வரவேற்பு அளித்துவிடும். வாஷிங் மிஷினில் ட்ரையரைப் பயன்படுத்தி உலர்த்தலாம். அல்லது சற்று மழை விட்டதும் வெளியில் காற்றாட உலர்த்த வேண்டும்.

கம்பளி துணியில் தூசி அதிகமிருந்தால் அது ஆஸ்துமா மற்றும் அலர்ஜியை ஏற்படுத்திவிடலாம். எனவே சுத்தமாக இருத்தல் அவசியம். முதலில் போர்வையை உதறி தூசிகளை வெளியேற்ற வேண்டும். வேக்வம் கிளீனர் பயன்படுத்தியும் தூசிகளை வெளியேற்றலாம்.
கம்பளி துணிகளை துவைக்க அல்லது சுத்தம் செய்வதற்கு முன்னர், உற்பத்தியாளர்கள் கூறி உள்ள வழிமுறைகளை படித்து பார்த்து விட்டு, அதல் கூறியிருக்கும்படி பின்பற்றுவது நல்லது.
கம்பளி போர்வையை சுத்தம் செய்வதற்கு முன் அதில் ஏதாவது கறைகள் இருந்தால் அதை அகற்றிவிட்டு துவைப்பது நல்லது.

கம்பளி துணிகளை மற்ற துணிகளுடன் சேர்த்து துவைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அதன் தன்மை மாறி, நிறமும் மங்கி விடும். கம்பளி ஆடைகள், கம்பளி துப்பாட்டாக்கள் மற்றும் போர்வைகளை தனியாகத் தான் துவைக்க வேண்டும்.கம்பளித் துணிகளை வெது வெதுப்பான நீரில்தான் அலச வேண்டும். முறுக்கிப் பிழியக் கூடாது. லேசாகப் பிழிந்து அப்படியே நீர்வடியும்படி கயிற்றில் போட்டுவிட வேண்டும். வெயிலில் உலர்த்தக் கூடாது. கம்பளித் துணிகள் அதிக நாட்கள் உழைக்க இதுதான் வழி.

கம்பளித் துணியில் பூச்சி அரிக்காமல் இருக்க...
கம்பளித் துணிகளைத் துவைக்கும்போது தண்ணீரில் சிறிது நவச்சாரம் கலந்து கொண்டால் துணியின் அழுக்கு நீங்கிப் புதிதாகத் தெரியும். அதே சமயம் பூச்சியும் அரிக்காது.
கம்பளித் துணிகளை வைக்கும் பெட்டியில் படிகாரத்தைத் தூள் செய்து மெல்லிய துணியில் முடிச்சாக முடிந்து போட்டு வைத்தால் பூச்சி அரிக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகம் எதிர்கொள்ளும்!

முன்னேற்றத்துக்கு வித்திடும் கணக்கெடுப்பு!

மா்ம காய்ச்சலில் சிறுமி உயிரிழப்பு

பெண் குழந்தைகளை காப்போம் - கற்பிப்போம்: விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



