கர்நாடகாவை மையமாகக் கொண்டு வெளிவரும் ‘போஸ்ட் கார்டு நியூஸ்’ எனும் இணையதள செய்திச் சேவையின் ஆசிரியர் போலிச்செய்தியைப் பரப்பிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். போஸ்ட் கார்டு நியூஸின் ஆசிரியரான மகேஷ் ஹெக்டே மார்ச் 19 ஆம் தேதியன்று கர்நாடகாவில் ஜெயின் துறவியொருவருக்கு நேர்ந்த விபத்து குறித்து விஷமத்தனமாக ட்விட்டர் பதிவிட்டதின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.
கடந்த மார்ச் 19 ஆம் தேதியன்று உபாத்யாயா மயன்க் சாகர் ஜி மகராஜ் எனும் ஜெயின் துறவிக்கு விபத்து நேர்ந்தது. அதற்கு காரணம் குடித்து விட்டு பைக் ஓட்டிய முஸ்லிம் இளைஞர் தான் என மகேஷ் ஹெக்டே தனது ட்விட்டர் கணக்கில் பதிவு செய்திருந்தார். அவரது ட்விட்டர் பதிவு தொடர்ந்து பலரால் உடனுக்குடனாக பகிரப்பட்டு சென்சேஷனல் செய்தியாக ஆக்கப்பட்டது. மகேஷ் ஹெக்டேவை ட்விட்டரில் பின்பற்றும் நண்பர்கள் பட்டியலில் பாரதப் பிரதமர் மோடியும் ஒருவர். அதோடு மகேஷ் ஹெக்டேவின் ட்விட்டர் பதிவு மாநிலத்தில் மதவெறியைத் தூண்டும் விதமாக இருந்ததால் இந்தக் கைது நேர்ந்திருக்கிறது என்கிறார்கள்.
கல்லூரி மாணவனின் உயிருக்கு எமனாக மாறிய டேட்டிங் செயலி (Dating app)!
கோழியைத் தப்ப வைத்த சிறுவனுக்கு ஒரு கூடை ஸ்மைலி பார்சல்!
நீச்சல் குளத்தில் காத்திருந்த எமன்! குழந்தைகளை நீச்சல் பயிற்சிக்கு அழைத்துச் சென்ற தந்தை மரணம்!
நான் முறைதவறிப் பிறந்தவளாக இருக்கலாம், அதனால் உங்களுக்கு என்ன?!
த்ரில் விளையாட்டா? திகில் விளையாட்டா? அநியாயமாக இளம்பெண்ணின் உயிரைப் பறித்த ‘கோ கார்ட்’ ரேஸ்கார்!