'தற்போது கார்த்திகை தீபம் வருகிறது. கார்த்திகை தீபம் என்றாலே மங்களகரமான தீபம் ஏற்றுவதுதான். மண் அகல் விளக்குகளை நிறைய வாங்கி அதில் கலர் கலராக பெயிண்ட் அடித்து, அதில் டிசைன் செய்து விற்பனை செய்யலாம். நிறைய அகல் விளக்குகளை வட்டமாக வைத்து பெவிகால் போட்டு ஒட்டிவிட்டு நடுவில் பிள்ளையார் அல்லது நமக்கு பிடித்தமான டிசைன் செய்து விற்பனை செய்யலாம். மண் குத்துவிளக்கு போல் சிறிதாக கிடைக்கும். அதை சுற்றி அகல் விளக்குகளை ஒட்டிவிட்டால் அது கூட ஒரு டிசைன்தான். அதற்கும் விதவிதமாக வண்ணம் தீட்டினால் நன்றாக இருக்கும். பேப்ரிக் பெயிண்ட் அடித்தாலே போதும். அழகாக இருக்கும் வித்தியாசமாக இருக்கும். அதையே மற்றவர்களுக்கும் விற்பனை செய்யலாம்.
தண்ணீரில் மிதக்கும் விளக்கு: மூங்கில் அல்லது ஐஸ் குச்சிகளை மெலியதாக எடுத்துக் கொள்ளுங்கள். தீக்குச்சி அளவு இருந்தால் போதும். அதை குறுக்கு நெடுக்காக ஒட்டி விடவும். நடுவில் பஞ்சு திரியை பொருத்திவிடுங்கள். இதை விற்பனைக்கு தரலாம்.
செய்முறை: கண்ணாடி கிளாசில் கால் அளவு தண்ணீர், கால் அளவு எண்ணெய்யை அதில் ஊற்றி பிறகு பஞ்சு திரியை அதில் போட்டால் அதில் திரி மிதக்கும். விளக்கு ஏற்றினால் ரொம்ப நேரம் விளக்கு எரியும் பார்ப்பதற்கு வித்தியாசமாக அழகாக இருக்கும்.
ஸ்டோன் விளக்கு: பெரிய பெரிய கலர்கலரான ஸ்டோன் பேன்சி கடைகளில் கிடைக்கும். ஜெர்மன் சில்வரில் அகல்போல் சின்னதாக கிடைக்கும். தெர்மாகோல் அல்லது அட்டையை தேவையான அளவு வட்டமாக வெட்டிக் கொள்ளுங்கள். முதலில் விளக்கை பெவிக்கால் வைத்து அட்டையின் நடுவில் ஒட்டவும். பிறகு அதைச் சுற்றி ஸ்டோன் ஒட்டி விடவும். இதையே இரண்டு அடுக்காக ஒட்டினால் போதும். மிக அழகாக இருக்கும் . வீட்டு வாசலில் நடுவில் வைத்து சுற்றி மண் அகல் விளக்கு வைத்தால் மிக அழகாகவும் மங்களகரமாகவும் இருக்கும்'
- சுய தொழில் ஆலோசகர் உமாராஜ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயணம் தாமதமாகும்! திருச்சியில் புறவழிச் சாலை காவிரிப் பாலம் மூடப்பட்டது!
சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை!

திருமணத்துக்கு முன் குஷ்பு மகள் அவந்திகா பகிர்ந்த படங்கள்!
கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல்! எ.வ. வேலுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



